கல்லறைக்கு வருபவர்களை பேயாக விரட்டிய மர்ம மனிதன்

.
பிரித்தானியாவில் நபர் ஒருவர் சுடுகாட்டிற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை பேய் போல் கூச்சலிட்டு பயமுறுத்துவதால் மக்கள் பீதியில் உள்ளனர். பிரித்தானியாவில் போர்ட்ஸ்மவுத் நகரை சேர்ந்த அந்தோனி (24) என்பவர் சுடுகாட்டுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை கூச்சலிட்டும், கைகளை அசைத்தும் பயமுறுத்தி வருகிறார்.


இவர் கல்லரையின் பின்னால் மறைந்து நின்று கொண்டு ”ஊஊஊ” என கூச்சலிட்டு அங்குள்ள அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். இந்நபர், ஏற்கனவே அடிதடி பிரச்சனைகள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 12 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த குற்றத்திற்காக 25 பவுண்ட்ஸ் அபராதமும், 15 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Popular Posts